விஷ்ணுப்பிரியாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது- இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
கடலூர்: தற்கொலை செய்து கொண்ட நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவின் உடல் கடலூர் கோண்டூரில் உள்ள பென்னையாற்று கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமான மாணவர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பியாக கடந்த 7 மாதமாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுப்பிரியா(27). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்தவர் விஷ்ணுப்பிரியா. மேலதிகாரிகளின் டார்ச்சர் காரணமாகவே விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சிபிசிஐடி விசாரணை...
விஷ்ணுப்பிரியாவின் மரணம் தொடர்பாக பல்வேறு கட்சிகளும் சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

பொதுமக்கள் அஞ்சலி...
இதனிடையே, விஷ்ணுப்பிரியாவின் உடல் அவரது சொந்த ஊரான கடலூரை அடுத்த கொண்டூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக விஷ்ணுப்பிரியாவின் உடல் வைக்கப் பட்டிருந்தது.

எம்.எல்.ஏக்கள் அஞ்சலி...
விஷ்ணுப்பிரியாவின் உடலுக்கு பண்ருட்டி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து, விருத்தாசலம் எம்.எல்.ஏ. முத்துக்குமார், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. இல. புகழேந்தி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

காவலர்கள் மரியாதை...
இதேபோல், கடலூர் எஸ்பி விஜயகுமார் மற்றும் நான்கு டிஎஸ்பிக்கள் உள்ளிட்டோரும் மலர்வளையம் வைத்து விஷ்ணுப்பிரியாவின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

இறுதி ஊர்வலம்...
பொதுமக்கள் அஞ்சலியைத் தொடர்ந்து இன்று காலை 10.50 மணிக்கு விஷ்ணுப்பிரியாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் கடலூர் மாவட்ட பொதுமக்கள், , கல்லூர் - பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

கைது செய் கோஷம்...
அவர்கள் அனைவரும், "கைது செய் கைது செய், தமிழக அரசே கைது செய், விஷ்ணுப்பிரியாவின் மரணத்திற்கு காரணமாக எஸ்பி செந்தில்குமாரை கைது செய்'' என்று கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.

அடக்கம்...
பின்னர், விஷ்ணுப்பிரியாவின் உடல் கடலூர் கோண்டூரில் உள்ள பென்னையாற்று கரையில் அடக்கம் செய்யப்பட்டது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications