"பாபநாசம்" ஆக்கிரமிக்கலாம்... ஆனால் "பாலக்காட்டு மாதவன்" வெல்வான்... விவேக் அதிரடி
சென்னை: கமல்ஹாசனின் பாபநாசம் திடீரென முன்கூட்டியே ஜூலை 3ம் தேதி வருவதால் பல படங்களுக்கு சிக்கல் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்து நடிகர் விவேக் ஒரு பரபரப்பு டிவிட்டை வெளியிட்டுள்ளார்.
பாலக்காட்டு மாதவன், ஒரு ஊர்ல ராஜா மொக்க ராஜா உள்பட சில படங்கள் ஜூலை 3ம் தேதிக்கு திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் திடீரென பாபநாசம் படம் அன்றைய தேதியில் ரிலீஸாகும் என்று கமல் படத் தயாரிப்பாளர் அறிவித்து விட்டார். இதனால் மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கமல் படம் வந்தால் தங்களது படத்தின் வசூல் பாதிக்கும் என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர். இருப்பினும் திட்டமிட்டபடி ஜூலை 3ம் தேதியன்றே தங்களது படம் வெளியாகும் என்று பாபநாசம் தரப்பு கூறி விட்டது.
முன்அறிவிப்பின்றி வரும் பாபநாசம்,தியேட்டர்களை ஆக்கிரமிக்கலாம்.இருப்பினும் ஊடக, ரசிகர்கள் ஆதரவுடன் பா.மாதவன் பெரும் வெற்றி அடையும்.
— Vivekh actor (@Actor_Vivek) June 26, 2015
இந்த நிலையில் பாலக்காட்டு மாதவன் பட ஹீரோ நடிகர் விவேக் ஒரு டிவிட் போட்டுள்ளார். அதில் "முன்அறிவிப்பின்றி வரும் பாபநாசம், தியேட்டர்களை ஆக்கிரமிக்கலாம். இருப்பினும் ஊடக, ரசிகர்கள் ஆதரவுடன் பா.மாதவன் பெரும் வெற்றி அடையும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
விவேக்கின் இந்த டிவிட்டுக்கு பலரும் ஆதரவு தெரிவித்தும், ரீட்வீட் செய்தும் வருகின்றனர்.