வெள்ளத்தால் தத்தளித்த கடலூர் கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்திய தன்னார்வலர்கள்
கடலூர்: வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள ஓணாங்குப்பத்தில் தன்னார்வலர்கள் சேர்ந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியுள்ளனர்.
வரலாறு காணாத கனமழையால் கடலூர் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் கோவில்கள், திருமண மண்டபங்களில் தஞ்சம் அடைந்தனர். பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் வடிந்த நிலையில் மக்கள் வீடுகளுக்கு திரும்பி வருகிறார்கள்.

இந்நிலையில் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தாலுகா, வடலூர் மருத்துவ வட்டத்தில் உள்ள ஓணாங்குப்பம் கிராமத்தில் தன்னார்வலர்களால் கடந்த 13ம் தேதி இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாம் மூலம் 200க்கும் மேற்பட்ட மக்கள் இலவச மருத்துவ உதவி பெற்றனர். இந்த முகாமில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் முதுகலை சமூக மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் சரவணகுமாரி, சீனிவாசன், தியாகராஜன் மற்றும் அரவிந்த் மருத்துவ பரிசோதனை செய்தனர்.

இந்த முகாமிற்கு திரு வி. குமரேசன் மற்றும் நண்பர்கள் (பெங்களூர்) திரு பி. நாகராஜன் மதுரை, திரு ஜெயராஜ் மற்றும் நண்பர்கள் (பெங்களூர்), திரு டி மாணிக்கவாசகம் நன்கொடையாக வழங்கிய மருந்துகள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. சிஐடி 91ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் முகாம் நடத்த நிதி உதவி செய்தனர்.
தன்னார்வலர்கள் திருமதி தமிழரசி, திருமதி மீனா, திரு பத்மநாபன் இம்முகாமிற்கு உறுதுணையாக இருந்தனர். இந்த முகாமை நடத்த உதவிய டாக்டர் ரா ராஜேஷ் குமார், தமிழ்மாறன் சிஐடி 91 முன்னாள் மாணவர் ஒருங்கிணைத்தனர். முகாம் நடத்த அனுமதி வழங்கிய கடலூர் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால், திரு டி கிருஷ்ணமூர்த்தி, வடலூர் வட்டம் டாக்டர் அகிலா செந்தில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications