பெர்ஃபாமென்ஸ் பண்ண விடுங்கய்யா! காலில் விழனும்..ரத்தத்தில் ஆல்கஹால் ஏறிய ரத்தத்தின் ரத்தங்களால் கலகல
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் ஏறி அதிமுக நிர்வாகி இருவர் குடிபோதையில் காலில் விழுந்து பேசவிடாமல் தடுத்து வம்புக்கு இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளரும் உளுந்தூர்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு திமுக ஆட்சி குறித்து வழக்கத்திற்கு மாறாக மிக ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார்.

அதிமுக கூட்டம்
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து எங்களிடம் பெரிய ரகசியம் இருக்கிறது என்றும் உதயநிதி மற்றும் கனிமொழி மு.க ஸ்டாலின் உள்ளிட்டவர் கூறினார்கள். ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகியும் நீட் தேர்வு குறித்து எந்த ரகசியத்தையும் இதுவரை கூறவில்லை. உதயநிதி ஸ்டாலின் என்ன இது பித்தலாட்டம் என ஒருமையில் பேசிய குமரகுரு, இதுதான் திராவிட மாடல் ஆட்சியா பிராடு மாடல் ஆட்சி என பேசிக்கொண்டிருந்தார்.

குடிமகன்கள்
அப்போது அதிமுக நிர்வாகிகள் இரண்டு பேர் குடித்துவிட்டு மேடையில் ஏறி குமரகுரு காலில் விழுந்து வணங்கி விட்டு மீண்டும் குமரகுரு காலில் விழவந்தனர். அப்போது மேடையில் இருந்த அதிமுக நிர்வாகிகள் சிலர் ரத்தத்தில் ஆல்கஹால் கலந்த ரத்தத்தின் ரத்தங்களை தடுத்து நிறுத்தியதால் அவர்கள் இருவரும் மேடையிலேயே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஒருவழியாக இருவரும் மேடையில் இருந்து இறக்கப்பட்டனர்.

மேடையில் தகராறு
இந்நிலையில் குடிமகன்கள் இருவரும் மீண்டும் மேடைக்கு வந்து தகராறு ஈடுபட்டதால் மனலூப்பேட்டை காவல் துறையினர் விரைந்து வந்து இரண்டு அதிமுக நிர்வாகிகளும் அழைத்துக் கொண்டு போய் வெளியில் விட்டனர். மீண்டும் பேச்சை தொடங்கிய குமரகுரு அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்ட பணிகளை திமுக ஆட்சி அடியோடு முடக்கிவிட்டது. அம்மா அம்மா உணவகத்தால் எத்தனை ஏழைகள் குறைந்த விலையில் உணவு சாப்பிட்டனர் எனப் பேசினார்.

பெர்பாமென்ஸ்
அப்போது குழந்தை பிறந்த தம்பதி மேடையில் ஏறி தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என குமரகுருடன் கேட்டபோது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் மேடையில் இருப்பதை பார்த்த குமரகுரு அந்த தம்பதியின் குழந்தைக்கு ஜெயவர்த்தன் என பெயர் சூட்டினார். குழந்தையின் கையில் 2000 ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு சென்றார். அப்போது மேடையில் இருந்த நிர்வாகிகள் சிலர் 'நம்மாளுகளே நம்மள பெர்பாமென்ஸ் பண்ண விடமாற்றாங்களே' என புலம்பித் தள்ளினர்.
-
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கும் ராயபுரம் மனோ? எடப்பாடி பக்கா பிளான்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்!












Click it and Unblock the Notifications