தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி 86 சதவீதம் முடிந்துள்ளது: தலைமை தேர்தல் அதிகாரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் திட்டமிட்டப்படி ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகள் 86 சதவீதம் நிறைவடைந்து விட்டது. மீதம் உளள பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு திட்டமிட்டபடி வரும் ஜனவரி 5ம் தேதி அன்று புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

Voter list will be release on January 5: Sandeep Saxena

சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம்களில் விண்ணப்பித்தவர்களில் தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் புதிய வாக்களர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். புதிய வாக்காளர்களுக்கு வண்ணப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை வழங்கப்பட உள்ளது.

தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25ம் தேதி அன்று புதிய வாக்காளர்களுக்கு வண்ணப் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், அனைத்து வாக்காளர்களுக்கும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வண்ணப் புகைப்படத்துடன் வாக்காளர் அடையாள அட்டை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+