நான் கடவுளுக்கு மட்டுமே பயப்படுவேன்.. மவுனம் கலைத்த டிடிவி தினகரன்
எங்களை யாரும் மிரட்ட முடியாது. கடவுளுக்கும் உண்மைக்கும் மட்டுமே பயப்படுவோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: இப்போது நடப்பது தியாகத்திற்கும் துரோகத்திற்கும் இடையேயான யுத்தம் என்றும், நாங்கள் கடவுளுக்கு மட்டுமே பயப்படுவோம் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுகவில் பிளவுபட்டிருந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த பின்னர் டிடிவி தினகரன் அணி எம்எல்ஏக்கள் தனியாக பிரிந்து சென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர். 19 எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் தங்கியிருந்து தினசரியும் டிவியில் பேட்டி கொடுத்து வருகின்றனர்.
தொண்டையில் வலி காரணமாக சில தினங்கள் கழித்து தொண்டர்களை சந்திப்பேன் என்று டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

வலி சரியாகவில்லை
அணிகள் இணைந்து 6 நாட்கள் கழித்து இன்று சென்னையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தொண்டை வலி இருப்பதால் தொடர்ந்து பேச முடியாது என்று கூறினார். திருப்பூரில் நடைபெறும் திருமணத்திற்கு சென்று விட்டு வந்து விரிவாக பேசுவதாகவும் கூறினார்.

பயமில்லை
யாருக்காகவும் பயந்து புதுச்சேரியில் பதுங்கவில்லை. கட்சியை காப்பாற்றவே தியாக உணர்வோடு புதுச்சேரியில் தங்கியுள்ளனர். அவர்கள் 19 பேரும் தியாக உள்ளத்தோடு தங்கியுள்ளனர்.

கடவுளுக்கு மட்டுமே பயம்
நாங்கள் உண்மைக்காகவும், கடவுளுக்கு மட்டுமே பயப்படுவோம். வேறு யாருக்காவும், எதற்காகவும் பயப்பட மாட்டோம். இது தியாகத்திற்கும் துரோகத்திற்குமான போர். இதில் எங்கள் அணியைச் சேர்ந்த தியாகிகள் வெல்வார்கள்.

பணம் பாயாது
பணம் பாதாளம் வரை பாயும் என்று சில அமைச்சர்கள் கூறி வருகின்றனர். எங்கள் எம்எல்ஏக்களிடம் பணம் பாயாது. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை காப்பற்றவும், கட்சியை காப்பாற்றவும் அனைவரும் புதுச்சேரியில் தியாக உள்ளத்தோடு தங்கியுள்ளனர்.
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம்












Click it and Unblock the Notifications