சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு!
சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
சேலம் : மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் 8 கண் மதகு வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வருகிறது.
பருவமழை பொய்த்ததோடு, மேட்டூர் அணையிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டுகுறுவை சாகுபடிக்கு ஜூன் மாதம் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில் விவவாயிகள் மிகவும் கவலையடைந்திருந்தனர். ஆனால் தென்மேற்குப் பருவமழை தமிழகத்தை சுற்றியுள்ள அண்டை மாநிலங்களில் நல்ல மழையை தந்தது.
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் பெய்த கனமழையால் தமிழகத்திற்கு அந்த மாநிலங்களில் வர வேண்டிய நீரின் அளவு அதிகரித்தது. இதனால் தமிழகத்திலுள்ள அணைகளின் நீர்மட்டமும் அதிகரித்தது. இதே போன்று தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்ததால் மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே நீர்திறப்பு செய்யப்படாததால் அணையின் நீர்மட்டம் தற்போது 94 அடியை எட்டியுள்ளது.

மழையின் அளவு அதிகரிப்பு
பொதுவாக, டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவத்தில், சுமார் 14 லட்சத்து 93 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் நாற்று நடவு முறை மூலம் சாகுபடி செய்யப்படும். நடப்பாண்டில், இதுநாள் வரை தமிழ்நாடு பெற வேண்டிய இயல்பான மழை அளவான 480.5 மி.மீக்கு 533.4 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது.

நீர் திறக்க உத்தரவு
மேட்டூர் அணையில் தற்போதுள்ள நீர் இருப்பைக் கருத்தில் கொண்டும், இனி வரும் மாதங்களில் கர்நாடகா நீர்த்தேக்கங்களிலிருந்து கிடைக்கக்கூடிய நீரினை எதிர்நோக்கியும் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கென இன்று முதல் நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டார்.

மலர் தூவி திறந்து விடப்பட்டது
இதன்படி அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன், கருப்பண்ணன், ஆட்சியர் ரோகிணி, செம்மலை எம்எல்ஏ உள்ளிட்டோர் மலர்களைத் தூவி அணையில் இருந்து நீரை திறந்து விட்டனர். அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரை மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.

60 நாட்களுக்குத் திறப்பு
மேட்டூர் அணையின் 8 கண்மதகு வழியாக திறந்து விடப்பட்ட 2,000 கனஅடி தண்ணீர் சீறிப்பாய்ந்து ஓடுகிறது. இதனையடுத்து படிப்படியாக நீரின் அளவு 15,000 கன அடி வரை அதிகரிக்கப்பட உள்ளது. இன்று முதல் தொடர்ந்து 60 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று தெரிகிறது, எனினும் நீரின் இருப்பை பொருத்து பாசனத்திற்காக திறந்துவிடப்படும் நாட்கள் அதிகரிக்கும். மேலும் 8 நாட்களில் இந்த நீர் கடைமடை பகுதியை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications