ஓடி வரும் காவிரி... தொடர் நீர் வரத்தால் 79.8 அடியை எட்டியது மேட்டூர் அணை!

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்: காவிரியில் தமிழகத்துக்காக நீரை கர்நாடகா திறந்துவிட்ட நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.8 அடியை எட்டியுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசு, கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த 6-ந் தேதி நள்ளிரவு முதல் வினாடிக்கு 15,000 ஆயிரம் கனஅடி நீரை காவிரியாற்றில் வெளியேற்றியது.

Water level in Mettur dam nears 80 ft

இந்த நீர் வந்து சேர்ந்ததால் வினாடிக்கு, 3,091 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து 15,070 கனஅடியாகவும் நேற்று 16,053 கனஅடியாகவும் அதிகரித்தது.

கூடுதல் நீர்வரத்தால் கடந்த 8-ந் தேதி 76.15 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 79.8 அடியை எட்டியது. மேட்டூர் அணையில் 38.22 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு நேற்று 41.22 டி.எம்.சி.,யாக அதிகரித்தது.

இருப்பினும் மேட்டூர் அணை 90 அடியை எட்டினால்தான் சம்பா சாகுபடிக்கான நீரை திறக்க முடியும். இந்நிலையில் காவிரியில் தொடர்ந்து கர்நாடகா நீர் திறக்குமா? என தெரியாததால் டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+