மேட்டூரில் இருந்து திறக்கப்படும் நீர் அளவு குறைப்பு
நீர் வரத்து குறைவானதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்: அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு என்று கடந்த மாதம் செப்டம்பர் 21ம் தேதியில் இருந்து 21 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து நீர் வரத்து இருந்த நிலையில், தண்ணீர் வரத்து குறையத் தொடங்கியது. இதனால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 8 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்ட நீர், பின்னர் 5 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று நண்பகல் 12 மணி முதல் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது அணையின் நீர் மட்டம் 46.9 கன அடியாக உள்ளது. நீரின் இருப்பு 15.55 டிஎம்சியாக உள்ளது.












Click it and Unblock the Notifications