கன மழை எதிரொலி: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
சேலம்: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளின் விவசாய பாசனத்திற்கு மிகவும் துணை புரிவது மேட்டூர் அணை தான்.

அணையிலிருந்து கால்வாய் பாசனத்திற்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகின்றது. டெல்டா பாசனத்திற்கு 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட இருந்தது.
இந்நிலையில் நேற்றிலிருந்து டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக நீர் திறப்பு இன்று காலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.86 அடியாக உள்ளது. மேலும், அணையில் நீர் இருப்பு 69.93 டி.எம்.சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications