கடும் சீற்றத்துடன் காணப்படும் கடல்.. மீனவர்கள், பொதுமக்கள் கடலில் இறங்க தடை
தமிழக கடற்பகுதி கடும் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: தமிழக கடற்பகுதி கடும் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடலில் ஏற்பட்டுள்ள தொலைதூர சலனங்கள் மற்றும் இயற்கை மாற்றத்தால் கடல் சீற்றத்துடன் காணப்படும் என கடல்சார் தகவல் மையம் தெரிவித்திருந்தது.

இதன்காரணமாக இன்று முதல் 2 நாட்களுக்கு கடலில் நெருங்கிய இடைவெளியில் 3.5 மீட்டர் உயரத்திற்கு அலைகள் சீற்றத்துடன் எழும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மீனவர்கள் பொதுமக்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்தது.
கடல்சார் தகவல் மையத்தின் எச்சரிக்கையை அடுத்து பாம்பன் பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 150-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் அக்னிதீர்த்தம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் பக்தர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்படுகின்றன. பலத்த காற்று, கடல் சீற்றத்தால் 11 அடி உயரத்திற்கு அலைகள் எழும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே கடலோர பகுதிகளில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்தால் ராமேஸ்வரம், கன்னியாகுமரி கடற்பகுதிகள் அதிகம் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications