நாங்குநேரி மருத்துவமனையில் இந்தியில் பேசிய ஆய்வு செய்த உலக வங்கிக் குழு

Subscribe to Oneindia Tamil

நாங்குநேரி: உலக வங்கி உதவியுடன் நாங்குநேரி மருத்துவமனையில் செயல்படுத்தப்படும் பணிகள் குறிந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

நாங்குநேரி தாலுகா அரசு ம்ருத்துவமனையில் உலக வங்கி குழு மற்றும் மருத்துவ குழுவினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். டாக்டர் புஷ்ரா ஆலம் தலைமையில் உலக வங்கியின் பொருளாதார நிபுணர் சங்கீதா பிண்டோ, கணிணி தகவல் தொடர்பு ஆலோசகர் பிரதீப், உலக வங்கி சுகாதார ஆலோசகர் ஸ்ரீலதா சேசத்திரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நாங்குநேரி மருத்துவமனையில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

கணிணி தகவல் தொடர்பு வசதிகள், மகப்பேறு வார்டு, ஆண் மற்றும் பெண் வார்டு, ஆயவகம், மருந்து, கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு பணியாற்றும் ஊழியர்களிடமும், நோயாளிகடமும் மருத்துவமனை வசதிகள், வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தனர். சிறப்பு குழுவினர் இந்தியில் பேசியதை மருத்துவர் ஒருவர் மொழி பெயர்ப்பு செய்து விளக்கினார்.

இந்த ஆய்வின் போது சிறப்பு மருத்துவ ஆலோசகர் காமாட்சி, சுகாதார தகவல் மேலாண்மை துணை யக்குனர் திருநாவுக்கரசு, தென்காசி கோட்ட மருத்துவ அலுவலர் கோபால் உள்பட பலர் உடன் இருந்து உலக வங்கி குழுவுக்கு தேவையான விளக்கங்களை அளித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+