முதல்வரே, எங்கள் வாழ்க்கைக்கான போராட்டம் உங்களுக்கு பேஷனா...? நெடுவாசல் மக்கள் வேதனைக் கேள்வி!
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடி வருவது எங்கள் வாழ்க்கையை காப்பாற்றுவதற்குத்தான். பேஷனுக்காக அல்ல என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.
புதுக்கோட்டை: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்கள் எங்கள் போராட்டம் வயிற்றுப் பிழைப்புக்கானது; பேஷனுக்கானது அல்ல என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கூறியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமுல்படுத்த நிலங்களைக் கையகப்படுத்தி, குழாய்களை பதித்து வருகிறது.
மத்திய அரசின் இத்திட்டத்தால் விவசாயம் அழிந்து விடும், நிலத்தடி நீர் மாசடைந்து அங்கு வாழ்வதே கேள்விக்குறியாகி விடும் என கூறி அக்கிராமத்தைச் சார்ந்த மக்கள் இரண்டாம் கட்டமாக, 89 நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாவினால் சுட்ட வடு
இந்நிலையில் சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பெண்கள் குழந்தைகளுடன் போராட்டம் செய்வது தற்போது பேஷன் ஆகி வருகிறது என கூறினார். இது போராட்டத்தில் ஈடுப்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து மக்களையும் மிகக் கடுமையாகப் பாதித்தது.

இது பேஷனா?
இதுகுறித்து நெடுவாசலில் போராட்டம் நடத்தி வரும் சிறுவர்கள், பெண்கள் கூறுகையில், இது எங்கள் வாழ்க்கையை காப்பாற்றுவதற்கான போராட்டமே ஒழிய பேஷனுக்காகப் போராட்டம் நடத்தவில்லை என வேதனையுடன் கூறியுள்ளானர்.

சிறப்புத் தீர்மானம் இயற்ற முடியுமா?
மேலும் முதல்வர் சட்டசபையில் கூறிய இந்த வார்த்தைகளை, சிறப்புத் தீர்மானமாக இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பினால் போராட்டத்தை நிறுத்திக்கொள்கிறோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் கூறியுள்ளனர்.

டாஸ்மாக் போராட்டம்
திருப்பூர் சாமளாபுரத்தில் அப்போதைய ஏடிஎஸ்பி பாண்டிய ராஜன் டாஸ்மாக் போராட்டத்தில் ஈடுபட்ட ஈஸ்வரி என்ற பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அதனால் அவருடைய கேட்கும் திறனே பாதிக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து விளக்கமளிக்கையில் முதல்வர் எடப்பாடியார், பெண்கள் தான் வன்முறையில் ஈடுபட்டனர் என கூறினார்.

போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் முதல்வர்
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு விவசாயிகள் போராட்டம், டாஸ்மாக், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு, தாமிரபரணியில் குளிர்பான நிறுவனங்கள் நீர் எடுப்பதைத் தடுக்கும் போராட்டம் என தினம் ஒரு போராட்டம் நடந்து வருகிறது. அதில் பெண்களும் சிறுவர்களும் கலந்துகொள்கின்றனர். ஆனால், அனைவரையும் பாதிக்கும் வகையிலும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் முதல்வர் எடப்பாடியார் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications