தமிழகத்தைக் குப்பை இல்லாத மாநிலமாக மாற்றுவோம் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி : வீடியோ
தமிழ்நாட்டை குப்பை இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சென்னை மாநாகராட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கூறினார்.
சென்னை: குப்பை இல்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றுவோம் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சென்னை மாகராட்சியில் நடந்த கூட்டத்தில் கூறினார்.
ஐ.நா சபையின் வழிகாட்டுதலின் படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நேற்று சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சென்னை மாநாகராட்சி தலைமை அலுவலகத்தில் மாநகராட்சி பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

அதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பையை பிரித்து மேலாண்மை செய்வதற்கான காரணத்தை மாநகராட்சி ஊழியர்களுக்கு விளக்கினார்கள். மேலும் இதுகுறித்துப் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, குப்பைகளை அகற்றுவதுதான் பெரும் பிரச்சனையாக உள்ளது. ஆனால் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்துப் போட்டு குப்பைகளை எளிதாக அகற்றலாம்.
அதற்காக உள்ளாட்சித்துறை சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனக்கள் உதவியுடன் குப்பை மேலாண்மை நடைபெற்று வருகிறது. தமிழகத்தை குப்பை இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என கூறினார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் உடன் இருந்தார்.












Click it and Unblock the Notifications