இந்தியை எதிர்க்கவில்லை… இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்… மு.க. ஸ்டாலின் திட்டவட்டம்
இந்தியை எதிர்க்க வில்லை; இந்தி மொழித் திணிப்பைத்தான் எதிர்க்கின்றோம் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள தண்டையார் பேட்டையில் திருமண விழா ஒன்றில் ஸ்டாலின் இந்தக் கருத்தை வெளியி
சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே. நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார் பேட்டையில் இன்று திருமண விழாவில் திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பேசிய அவர், இந்தியை எதிர்க்கவில்லை என்றும் இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கின்றோம் என்றும் கூறினார். இந்தியை திணிக்க வேண்டாம் என்றுதான் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஆர்கே நகர் தொகுதி மக்கள் ஆளும் கட்சியை எதிர்க்கின்றனர் என்று கூறிய ஸ்டாலின், ஆர்.கே. நகர் மக்கள் எதிர்கால தலைமுறையை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்று விழாவில் பங்கேற்றவர்களை கேட்டுக் கொண்டார்.
அதே போன்று ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவு என்பது தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை உறுதி செய்யும் என்று மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக தொண்டர்களும் அப்பகுதி மக்களும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications