'தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை'... சூர்யாவின் அகரம் அறக்கட்டளை
தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என சூர்யாவின் அகரம் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அகரம் என்ற அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி சூர்யா பல்வேறு நலத் திட்டங்களை செய்து வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம் யாதும் என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இதழ் ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார்.
சூர்யாவின் அகரம் அறக்கட்டளை இந்தத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் நாங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என அகரம் அறக்கட்டளை இன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அகரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் '' இந்தத் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நேரத்தில் நங்கள் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறோம். இந்தத் தேர்தலில் அகரம் அறக்கட்டளை நடுநிலை வகிக்கிறது. மேலும் எந்த ஒரு தனிப்பட்ட கட்சிக்கும் நாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.