For Daily Alerts
Just In
தீபக் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து.. தீபாவை வரவேற்க நாங்கள் ரெடி.. ஓபிஎஸ்
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவை வரவேற்க தயாராக இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவை வரவேற்க தயாராக இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தீபக் தனது தனிப்பட்ட கருத்தை கூறியுள்ளார் என்றும் அவர் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஆர்கே.நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் அவரது உள்ளத்தில் இருப்பதை கூறியுள்ளார் என்றார்.
தீபக் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். மேலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை வரவேற்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சசிகலா தரப்பைச் சேர்ந்த தீபக் நேற்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பேசினார். அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும் தகுதி ஓபிஎஸ்க்கே இருப்பதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Former Chief minister O.Paneerselvam Meets press today. he said that we are ready to welcome Deepa.
Story first published: Friday, February 24, 2017, 14:41 [IST]