அதிமுக, பாஜக ஆட்சியை அகற்ற நாம் ஒன்றிணைய வேண்டும்: ஸ்டாலின் பேச்சு
அதிமுக, பாஜக ஆட்சியை அகற்ற நாம் ஒன்றிணைய வேண்டும் என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை : அதிமுக பாஜக ஆட்சிக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் ரமலான் பண்டிகையையொட்டி, திமுக சார்பில் உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார்.

இந்த விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு லுங்கி, சட்டை, புடவைகள் மற்றும் பிரியாணி அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சிக்கும் சரி, ஆட்சியாளர்களுக்கும் சரி மக்களைப்பற்றி கொஞ்சமும் கவலை இல்லை. தங்களை வளப்படுத்திக்கொள்ளவே ஆட்சி நடைபெற்று வருகிறது.
சட்டசபையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்கள் பிரச்னை குறித்துப் பேச அனுமதி வழங்கப்படுவது இல்லை. இந்த ஆட்சிக்கு விரைவில் நாம் முடிவு கட்ட வேண்டும்.
மத்தியிலும், மாநிலத்திலும் நடந்து வரும் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications