சிஸ்டத்தை மாற்ற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் : ரசிகர்களுடன் வீடியோ கான்பரன்ஸிங்கில் ரஜினி பேச்சு
சிஸ்டத்தை மாற்ற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ரஜினி வீடியோ கான்பரன்ஸிங் உரையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : சிஸ்டத்தை மாற்ற தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ரஜினிகாந்த் தனது தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸிங்கில் இன்று பேசியுள்ளார்.
ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். இதனையடுத்து நேற்று தனது வீட்டில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினி, விரைவில் எஞ்சிய மாவட்டங்களுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்தபின் தீவிர அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், தனது அரசியலுக்குப் பின்னால் மக்களும், கடவுளும் தான் இருக்கிறார்கள் எனவும், பாஜக இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், ரஜினி இன்று தென்சென்னை ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸிங்கில் உரையாற்றினார்.
அப்போது, ரசிகர்கள் எப்போதும் இதயத்தையும் எண்ணத்தையும் தூய்மையாக வைக்கவேண்டும் என்றும், ஆண்டவன் நமக்கு கொடுத்திருக்கும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இந்த வாய்ப்பின் மூலம் தமிழக அரசியலலில் மாற்றத்தைக் கொண்டு வர அனைவரும் உழைக்க வேண்டும் என்றும், அதன் மூலம் சிஸ்டத்தை முழுமையாக மாற்ற அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும், பதவி கிடைக்கவில்லை என்றும் யாரும் வருத்தப்படக்கூடாது என்றும் ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications