ஜெ. மரண கேஸ் முடியும் வரையெல்லாம் பொறுக்க முடியாது, சட்டுன்னு முடிவெடுங்க.. ஜெயகுமார்

ஜெயலலிதா மரணம் குறித்த தீர்ப்பு வரும்வரை எல்லாம் அதிமுக இணைப்புக்காக காத்திருக்க முடியாது என்று நிதி அமைச்சர் ஜெயகுமார், ஓபிஎஸ் அணிக்கு கெடு விதித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து தீர்ப்பு வரும் வரை அணி இணைப்புக்காக எங்களால் காத்திருக்க முடியாது என்பதால் உடனடியாக ஒரு பேச்சுவார்த்தை குறித்து நல்ல முடிவு எடுங்கள் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

இரட்டை இலை முடக்கப்பட்டதை தொடர்ந்து அவற்றை மீட்டெடுக்க அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என விரும்பினர். இதற்காக நள்ளிரவு ஆலோசனைகள் எல்லாம் நடத்தினர்.

ஆனால் இலைக்கு எட்டியது கைக்கு எட்டவில்லை என்பதை போல இவர்கள் இணைவதற்கான அறிவிப்பு வெளியாவதற்குள் சசிகலா, தினகரனை கட்சி பதவிகளில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்றும் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஓபிஎஸ் நிபந்தனை விதித்தார்.

இரு அணிகளும் மோதல்

இரு அணிகளும் மோதல்

சசிகலாவையும், தினகரனையும் அதிமுக பதவிகளில் இருந்து நீக்கவில்லை, நிபந்தனைகள் நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை என்று ஓபிஎஸ் அணியினர் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் இரு அணியின் நிர்வாகிகளும் மாறி மாறி பேசியதால் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் அதிமுகவின் அணிகள் இணையாது என்று நினைத்திருந்த வேளையில், அமைச்சர் ஜெயகுமார் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் அணியினரை அழைத்து வருகிறார்.

விமான நிலையத்தில் பேட்டி

விமான நிலையத்தில் பேட்டி

டெல்லியில் ஜிஎஸ்டி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு சென்னை திரும்பிய அமைச்சர் ஜெயகுமார் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுகவில் இரு அணிகள் இணைப்பு விவகாரத்தில், நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். அவர்கள் நாளைக்கே பேச வந்தாலும், நாங்கள் தயார்.

காத்திருக்க முடியாது

காத்திருக்க முடியாது

ஓபிஎஸ் அணியின் இரு நிபந்தனைகளில் ஒன்றான ஜெயலலிதா மரணம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அந்த தீர்ப்பு வரும் வரை எங்களால் காத்திருக்க முடியாது. மேலும் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அதற்கு முன்னால் எதுவும் செய்யமுடியாது.

அவரவர் விருப்பம்

அவரவர் விருப்பம்

சசிகலா, தினகரன் ஆகியோர் ஆட்சியிலோ, அதிகாரத்திலோ, கட்சியிலோ தலையிடவில்லை. அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். அதையும் மீறி, அவர்கள் ஆட்சியில் தலையிடுகிறார்கள், அதிகாரத்தில் தலையிடுகிறார்கள் என்று கூறுவார்களேயானால், அதை கவனிக்கத் தயாராக உள்ளோம். சசிகலாவையும், தினகரனையும் சிறையில் சென்று சந்திப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அவ்வாறு சந்திப்பவர்களை நாங்கள் எதுவும் கேட்கவும் முடியாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+