போயஸ் கார்டனையும் ஜெயலலிதாவின் சொத்துக்களையும் கைப்பற்ற வேண்டும்... காரியத்தில் கண்ணாக இருக்கும் சசி
சிறைக்கு செல்ல உள்ள சசிகலா போயஸ் கார்டனையும் அவரது சொத்துக்களையும் கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
சென்னை: தான் சிறைக்கு சென்றாலும் ஜெயலலிதாவின் சொத்துக்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீடு மற்றும் சொத்துக்களை அரசுடைமையாக்கமால் கைப்பற்ற வேண்டும் என்றும் அவர் தனது ஆதரவாளர்களிடம் பேசியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் நேற்று இறுதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரையும் உடனடியாக சரணடைய உத்தரவிட்டனர்.

சொந்தம் எதுவும் இல்லாத நிலையில் ஜெயலலிதாவின் சொத்துக்களை கைப்பற்றவே அவருடன் சசிகலா மற்றும் மன்னார்குடி கோஷ்டி தங்கிருந்ததாகவும் நீதிபதிகள் சவுக்கடி கொடுத்தனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக சிறைக்கு செல்ல உள்ள சசிகலா ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடைமையாக்குவதை தடுக்க வேண்டும் என தனது ஆதரவாளர்களுக்கு தூபம் போட்டுள்ளார்.
நேற்றிரவு கூவத்தூரில் இருந்து அவர் தங்கியுள்ள ஜெயலலிதாவின் வீடு உள்ள போயஸ் கார்டனுக்கு திரும்பும் முன்பாக ஆதரவாளர்களிடம் பேசினார். அப்போது நான் சிறைக்கு சென்றாலும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தையும் அவரது சொத்துக்களையும் யாரும் கைப்பற்றிவிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் சொத்துக்களை நாம் தான் காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் ஆதரவாளர்களை சீண்டி விட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு என வாரிசுகள் யாரும் இல்லாத நிலையில் அவரின் சொத்துக்களை கைப்பற்றி அதனை சசிகலா குடும்ப சொத்துக்களாக மாற்றவேண்டும் என்பதற்காகவே அவர் இவ்வாறு பேசியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவத்துள்ளனர்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications