சசிகலா குடும்பம் வசம் கட்சி, ஆட்சி போவதை தடுக்கும் வரை தர்ம யுத்தம் தொடரும்: ஓபிஎஸ்
ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சியும் ஆட்சியும் செல்வதை தடுத்து நிறுத்தும் வரை தர்ம யுத்தம் தொடரும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சியும் ஆட்சியும் செல்வதை தடுப்போம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதுவரை தர்ம யுத்தம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சசி குரூப் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது மக்கள் விரும்பும் ஆட்சி தொடரும் வரை தர்ம யுத்தம் தொடரும் என்றார். ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சியும் ஆட்சியும் செல்வதை தடுத்து நிறுத்துவோம் என்றும் அவர் கூறினார். மேலும் தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications