விருதுநகரில் டெங்குவை நுழையவிடமாட்டோம்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி
விருதுநகரில் டெங்குவை நுழைய விடமாட்டோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: விருதுநகரில் டெங்குவை நுழைய விடமாட்டோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது விருதுநகர் மாவட்டத்துக்குள் இதுவரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை என்றார். மேலும் விருதுநகரில் டெங்கு காய்ச்சலை நுழையவிடமாட்டோம் என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தியதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். டெங்கு காய்ச்சல் விருதுநகர் மாவட்டத்துக்குள் நுழைய முடியாது என்ற அவர் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதகா கூறினார்.












Click it and Unblock the Notifications