Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைக்க மாட்டோம் - உதயகுமார்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: அரசியல் கட்சி சார்ந்தவர்களுடன் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக்குழு எநத வித தொடர்பும் வைத்து கொள்ளாது என கூடங்குளம் போராட்ட குழு தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. நேற்று இடிந்தரை, கூத்தகுழி, ஆலந்தலை, கூடங்குளம், வைராவிகிணறு, வீரபாண்டிபட்டிணம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நிருபர்களுககு பேட்டியளித்தார்.

We will not allign with any TN parties, says Udayakumar

அவர் கூறுகையில், நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டினோம். எங்கள் போராட்டத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் ஆதரவு தரவில்லை.

அரசியல் தந்திர போராட்டக்காரர்களுடன் எங்களால் இணைந்து செயல்பட முடியாது. மக்கள் குறைகளை நிறைவேற்ற முடியாது. எனவே தமிழகத்தில் அரசியல் கட்சிகளுடன் எந்த வித தொடர்பும் வைத்து கொள்வதிற்கில்லை என்று முடிவு செய்துள்ளோம்.

அணு உலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைய வேண்டும் என்று கேட்டு் கொண்டார்கள். நாங்கள் அந்த கட்சியி்ல் சேருவற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளோம். அந்த நிபந்தனைகளை அவர்கள் ஏற்று கொண்டால் அந்த கட்சியில் இணைவது பற்றி முடிவேடுப்போம் என்றார் அவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+