For Daily Alerts
Just In
சசிகலா குடும்பத்தின் ஆட்சியை நீக்குவோம்- ஜெ. சமாதியில் ஓபிஎஸ் சபதம்
சசிகலா குடும்பத்தின் ஆட்சியை நீக்குவோம் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலா குடும்பம் தான் தற்போது ஆட்சி பதவியில் அமர்ந்துள்ளது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சசிகலா குடும்பத்தின் ஆட்சியை நிக்குவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை சசிகலா குடும்பத்தினரை ஏற்கவில்லை என்றார்.
மேலும் மக்கள் விரும்பாத சசிகலா குடும்பம் தான் தற்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளதாக கூறிய ஓபிஎஸ், சசிகலா குடும்பத்தின் ஆட்சியை நீக்குவோம் தெரிவித்தார்.
English summary
Former Chief minister O.Paneerselvam said We will remove the Sasikala family from ruling in Tamilnadu