ரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் எனக்கும் தொடர்பில்லை... நடிகர் பார்த்திபன் கிண்டல்
ரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று நடிகர் பார்த்திபன் கருத்து தெரிவித்தார்.
ஈரோடு: அரசியலுக்கு வருவது குறித்து ரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்தார்.
ரஜினி காந்த் அரசியலுக்கு வருவது குறித்து கடந்த வாரம் நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பின்போது மறைமுகமாக குறிப்பிட்டார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதற்கு தமிழ் அமைப்புகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சியினரை தனது போயஸ் தோட்ட இல்லத்துக்கு வரவழைத்து கடந்த 2 நாள்களுக்கு முன்னர் ரஜினி கருத்து கேட்டார்.
இவரது அரசியல் பிரவேசம் குறித்து இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரஜினி அரசியல் குறித்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை முருகன் கோயிலுக்கு வந்த பார்த்திபனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ரஜினி காந்த் நேரடியாக அரசியலுக்கு வந்தால் அதுபற்றி கருத்து கூறலாம். ஆனால் அவர் ஆண்டவன் உத்தரவிட்டால் அரசியலுக்கு வருவேன் என்கிறார். ரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லாததால் அவர் அரசியலுக்கு வருவாரா? என்பது பற்றி எனக்கு தெரியவில்லை.
ரஜினி ஆண்டவனிடம் நேரடி தொடர்பு வைத்துள்ளார். எனக்கு நேரடி தொடர்பு இல்லை. இருந்தால் இது குறித்து நானே ஆண்டவனிடம் கேட்டு சொல்லிவிடுவேன். அவர் ஆண்டவனிடம் பேசி சொல்லும் வரை பொறுமை காப்போம் என்றார் பார்த்திபன்.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications