சேலத்தில் பளு தூக்கும் போட்டி.. 50க்கும் மேற்பட்டோர் திறனை காண்பித்து அசத்தல்: வீடியோ
சேலம் மாவட்டத்தில் 45வது பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to Oneindia Tamil
சேலம்: தமிழ்நாடு மாநில அளவிலான 45வது பளு தூக்கும் போட்டி சேலம் மாவட்டத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்கமும், சேலம் மாவட்ட வலுதூக்கும் சங்கமும் இணைந்து இந்தப் போட்டியை நடத்தியது.

சீனியர் மற்றும் மாஸ்டர் என 2 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் பளு தூக்கும் பெண் வீராங்கனைகளும் பங்கேற்று தங்களது திறமையை காட்டினர்.
இந்தப் போட்டியில் நடுவர்கள் அமர்ந்து வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மதிப்பெண் வழங்கினார்கள். இறுதியாக வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications