காவேரி மருத்துவமனைக்கு வந்தடைந்தார் திரிணாமூல் காங். எம்பி டெரிக் ஓ பிரையன்
காவேரி மருத்துவமனைக்கு வந்தார் மேற்கு வங்க மாநிலத்தின் திரிணாமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன்.
சென்னை: காவேரி மருத்துவமனைக்கு மேற்கு வங்க மாநிலத்தின் திரிணாமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
கருணாநிதிக்கு நேற்று முன் தினம் இரவு ரத்த அழுத்தம் குறைந்தது. இதையடுத்து அவர் நள்ளிரவில் காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார.

இந்நிலையில் நேற்று அதிகாலை அவரது உடல்நிலை சீரானது என்று மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டனர். இதனிடையே நேற்று முன் தினமும், நேற்றும் ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் வந்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து அவர் இன்று 2-ஆவது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். இன்று துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நலம் விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வருகை தரவுள்ளார்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் திரிணமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.












Click it and Unblock the Notifications