மேற்கு தொடர்ச்சி மலையில் “மழை”- 24 மணிநேரத்தில் பெய்ய வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன், "தமிழகத்தில் புழுதி புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. வெப்பத்தின் அளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் கடல் காற்று தாமதமாக வருவதால் தான்.

இதனால் வெப்பம் அதிகமாக உணரப்படுகிறது. மாறாக நிலத்திலும் வெப்பத்தின் அளவு உயர்ந்து வெப்பசலனம் அதிகமாகவே உள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் கனமழை பெய்யும்.
சென்னையை பொருத்த வரையில் மேகமூட்டத்துடனே காணப்படும். வெப்பத்தின் அளவும் குறைந்து காணப்படும். ஜூன் மாதத்தில் வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்சியசுக்கு கீழே தான் இருக்கும். வெப்பமும் குறைய வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications