இப்படிப்பட்ட "தவ வாழ்வு" எல்லோருக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார பயணங்களையும், திட்டங்களையும், ஏற்பாடுகளையும் பார்த்தால் அவர் பேசி வரும் "தவ வாழ்வு" என்பதற்கான அர்த்தம் என்ன என்ற பெரும் சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியாது.
மக்களுக்காக நான், தவ வாழ்வு வாழ்கிறேன் என்றெல்லாம் பேசி வரும் முதல்வர் ஜெயலலிதா, அதற்கு நேர் மாறாக இருப்பதுதான் மிகப் பெரிய முரணாக காட்சி தருகிறது.

நமக்குப் பளிச்சென தெரியும் இந்த முரண்பாடுகள், முதல்வருக்கு மட்டும் தெரியாமல் போவது ஏன் என்பது இன்னொரு ஆச்சரியமாகும்.
எல்லாத் தலைவர்களும்தான் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். கூட்ட நெரிசலும் ஏற்படத்தான் செய்கிறது. ஆனால் எங்குமே உயிரிழப்பு ஏற்பட்டதில்லை. காரணம், வெயில் அடியோடு தணியும் நேரத்தில் கூட்டம் போடுகின்றனர். அதை விட முக்கியமாக கூட்டம் போடுவதைக் காட்டிலும், வேனிலும், நடந்தும் போய் மக்களைச் சந்தித்து ஓட்டு வேட்டையாடுகிறார்கள்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு இதுபோல செய்ய பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம். மறுப்பதற்கில்லை. ஆனால் அவரது பிரசாரத்தில் எளிமை இல்லை, மக்களுக்கு நிம்மதி தரும் வகையில் இல்லை. மாறாக அவர்களை காய்ச்சி எடுத்து கடுமையாக தண்டிப்பது போலவே உள்ளது.
உதாரணத்திற்கு சில...
முதல்வர் ஜெயலலிதாவுக்குப் போடப்படும் மேடையில் அவரைத் தவிர வேறு யாரும் இல்லை. வேட்பாளர்களுக்கு கூட இடமில்லை. அவரது மேடையில் ஏகப்பட்ட ஏர் கூலர்கள் மற்றும் ஏசிகளைப் பொருத்தி ஜெயலலிதாவுக்கு ஒரு சொட்டு வியர்வை கூட வராதவாறு பார்த்துக் கொள்கின்றனர்.
அதேசமயம், அவரது பேச்சைக் கேட்க வரும் மக்களை கடும் வெயிலில் பல மணி நேரம் உட்காரவைத்து வெந்து அவிந்து போகச் செய்கின்றனர். பந்தல் கூட போடப்படுவதில்லை. அவர்களை பாதியில் எழுந்து போகவும் அனுமதிப்பதில்லை. குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் பரிதாபமாக காட்சி தரும் அந்த மக்களைப் பார்த்துப் பேசுகிறார் ... நான் தவ வாழ்வு வாழ்கிறேன் என்று.
மேடையில் முழுக்க முழுக்க ஏசியை வைத்துக் கொண்டு ஜாலியாக பேசுவதுதான் தவ வாழ்க்கையா எனறு யாரும் ஜெயலலிதாவைப் பார்த்துக் கேட்க முடியாது... கேட்டால் அவர்களுக்கு சிறை வாழ்வுதான் கிடைக்கும்!
சென்னையில் ஆரம்பித்து தொடர்ந்து கடும் வெயிலில் கூட்டம் போட்டு மக்களை சாகடித்து வந்த அதிமுகவால் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். சேலத்தில் 2 பேர், விருத்தாச்சலத்தில் 2 பேர், அருப்புக்கோட்டை கூட்டத்திற்குப் போன ஒருவர் என 5 உயிர்களைக் காவு கொண்டுள்ளது ஜெயலலிதாவின் பிரசாரம். இதுகுறித்து பெரும் கண்டனங்கள் எழுந்த நிலையில் இப்போதுதான் புத்தி வந்துள்ளது அக்கட்சிக்கு.
இன்று திருச்சியில் நடைபெறும் கூட்டத்தை மாலை 6.30 மணிக்கு மாற்றியமைத்துள்ளனர். மேலும் கூட்டத்தையும் 3 மணிக்கு மேல்தான் கூட்டி வருமாறும் உத்தரவிட்டுள்ளனறாம். மேலும் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு, விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வரப் போகிறாராம் ஜெயலலிதா. காரில் அவர் வரப் போவதில்லையாம்.
இந்தியாவிலேயே.. ஏன் உலகத்திலேயே இப்படிப்பட்ட ஒரு உன்னதத் தலைவரை இதுவரை யாரும் கண்டதில்லை...!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications