கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அந்தோணி ராபினும், அம்முவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் அம்முவுக்கும், அவருடைய சகோதரியின் கணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் அவ்வப்போது பேசி வந்துள்ளனர். இதனால் மனைவி மீது சந்தேகம் கொண்ட அந்தோணி ராபின் அம்முவை கண்டித்துள்ளார். இதனால் அந்தோணி ராபினுக்கு என்ன நடந்தது தெரியுமா? சினிமாவை மிஞ்சும் இந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
இன்றைக்கு குடும்ப உறவுகள் பலவீனமாகி கொண்டே போகிறது. கணவன் மனைவி இடையே மனம் விட்டு பேசுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போவதும், ஸ்மார்ட்போனும் உறவையே பிரிக்கின்றன. சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமில்லாதவர்களுடனான தொடர்புகள் எளிதாகிவிட்டதால் உறவுகளை பிரிந்து புதிய உறவை தேடும் ஆர்வமும் அதிகமாகி வருகிறது. அதேபோல் விட்டுக்கொடுத்து செல்லும் குணம் குறைந்து போனதால், சமரசம் என்பதே இல்லாமல் பிரிகிறார்கள்.

கள்ளக்காதல்
கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து தனிக்குடித்தனங்கள் பெருகியதால், பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கவோ அல்லது அறிவுரை சொல்லவோ பெரியவர்கள் யாரும் வீட்டில் இல்லை. பொருளாதார நெருக்கடி தரும் மன அழுத்தம், யாரிடமாவது கோபத்தைக் காட்டத் தூண்டுகிறது. அதேபோல் பிரச்சனைகளை வெளியில் சொல்ல அல்லது உதவுவதற்கு ஒரு ஆறுதல் வெளியே கிடைக்கும் போது, அதனை விட மறுக்கிறார்கள். அதுதான் பின்னாளில் கள்ளக்காதலாக மாறுகிறது. அதேபோல் கள்ளக்காதலில் சிக்கியவர்கள் தங்கள் துணையை காலி செய்யவும் தயங்குவது இல்லை.. கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
குடும்ப பிரச்சனை
கள்ளக்குறிச்சியை அடுத்த க.மாமந்தல் பகுதியைச் சேர்ந்த 26 வயதாகும் அந்தோணி ராபின் தனியார் கியாஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி அம்மு (22). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அந்தோணி ராபின் குடும்பப் பிரச்சனையில் தனக்குத் தானே பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துக் கொண்டதாகக் கூறி அவருடைய மனைவி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்தோணி ராபின் உயிரிழந்தார்.
சந்தேகம்
இந்த நிலையில் அந்தோணி ராபின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை மனைவி அம்முதான் கொலை செய்திருக்க வேண்டும் எனவும், அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அம்முவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவரே தனது கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ததாகத் தெரிவித்தார்.
வாக்குமூலம்
போலீசாரிடம் அம்மு அளித்த வாக்குமூலத்தில், அந்தோணி ராபினும், நானும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தோம். இந்த நிலையில் எனக்கும், என் சகோதரியின் கணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அவ்வப்போது பேசி வந்தோம். இதனால் என் மீது சந்தேகம் கொண்ட என் கணவர் அந்தோணி ராபின் கடுமையாக கண்டித்தார். இதனால் எங்களுக்கு இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி வீட்டிற்கு மதுபோதையில் வந்த என் கணவர் அந்தோணி ராபின் தகராறில் ஈடுபட்டார்.
கணவனை எரித்தார்
இதனால் ஆத்திரமடைந்த நான் என் கணவரை கொலை செய்ய முடிவு செய்தேன். பின்னர் வீட்டில் படுத்துத் தூங்கிய அந்தோணி ராபின் மீது வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து ஊற்றினேன். இதில் சுதாரித்துக் கொண்ட அந்தோணி ராபின் வீட்டில் இருந்து வெளியேறி சாலைக்குச் சென்றுள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த நான், அவர் மீது தீ வைத்து எரித்தேன். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததும், என் கணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக நாடகம் ஆடினேன். போலீசாரின் விசாரணையில் மாட்டிக் கொண்டேன்" இவ்வாறு அம்மு வாக்குமூலம் அளித்தாராம். இதையடுத்து அம்முவை கைது செய்த போலீசார், தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு














Click it and Unblock the Notifications