தீவிர கண்காணிப்பில் கருணாநிதி.. என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது?
திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக குழாயில் ஏற்பட்டு இருக்கும் நோய் தொற்றை குணப்படுத்த தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக குழாயில் ஏற்பட்டு இருக்கும் நோய் தொற்றை குணப்படுத்த தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இப்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். காவிரி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அவரது உடலின் சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவரது உடலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளதாக காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இந்த நிலையில் கருணாநிதிக்கு சிகிச்சை அளிப்பதற்காக காவிரி மருத்துவமனையில் இருந்து கூடுதலாக நான்கு மருத்துவர்கள் வந்து இருக்கிறார்கள்.
ஏற்கனவே இரண்டு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் புதிதாக வந்த மருத்துவர்கள் கூடுதல் மருத்துவ உபகரணம் கொண்டு வந்துள்ளனர். அவசர சிகிச்சை உதவி கருவிகளும் கொண்டு வந்துள்ளனர்.
அவருக்கு சிறுநீரக தொற்றால் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் அங்கு இருக்கும் 6 மருத்துவர்களில் 2 பேர், சிறுநீரக சிறப்பு மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுநீரகத்தில் ஏற்பட்டு இருக்கும் தொற்றை குணப்படுத்த அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை அவரது உடலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தற்போது காய்ச்சலை குணப்படுத்தவும் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications