இந்த மாதிரி அடிப்பதில் இஸ்ரேல்தான் கில்லாடி.. இந்தியாவும் தொடருமா?
சென்னை: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து இந்திய விமானப்படையினர் நடத்திய "சர்ஜிகல் அட்டாக்".. இதுதான் இன்று தலைப்புச் செய்தியாகியுள்ளது. நாடே பரபரப்பாகியுள்ளது. பாகிஸ்தானுடன் போர் வருமா என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.
அதை அப்புறம் பார்க்கலாம்.. அது என்ன சர்ஜ்சிகல் அட்டாக்.? குறி வைத்து குறிப்பிட்ட இலக்கை மட்டும் ராணுவத்தைக் கொண்டு தாக்குவது. அதுதான் சர்ஜிகல் அட்டாக் என்பதற்கான சுருக்கமான விளக்கம். பெரிய அளவிலான தாக்குதலாக இது இருக்காகது. மாறாக குறிப்பிட்ட இடத்தை மட்டும் குறி வைத்து அந்த இடத்தில் உள்ள இலக்குகளுக்கு மட்டும் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் வகையிலான தாக்குதல் இது.

மற்றபடி பொதுமக்களுக்கோ, பெரிய அளவிலான இடங்களுக்கோ சேதம் ஏற்படாத வகையில் இந்தத் தாக்குதல் அமையும். இது திட்டமிட்ட திடீர் தாக்குதலாக இருக்கும். எதிரியை நிலை குலைய வைக்கும் வகையில் இருக்கும்.
விமானம் மூலம்தான் பெரும்பாலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறும். அதாவது குறிப்பிட்ட இலக்கை குறி வைத்து விமானம் மூலம் குண்டு வீசித் தாக்குவது. இதைத்தான் இப்போது இந்திய விமானப்படையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செய்துள்ளது. மேலும் இந்தத் தாக்குதலில் கொத்து வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட மாட்டாது. அது பெரும் சேதத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.
2003ம் ஆண்டு ஈராக்கில் நடந்த போரின்போது அமெரிக்கப் படையினர் இதுபோன்ற தாக்குதல்களைத்தான் நடத்தினர். உண்மையில் இஸ்ரேல் இதுபோன் சர்ஜிகல் தாக்குதல்களில் கில்லாடி ஆகும். அதிக அளவில் அது இதுபோன்ற தாக்குதல்களை நடத்திய அனுபவம் கொண்டது.
இப்போது இந்தியா இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட்டதை பாகிஸ்தான் நிச்சயம் எதிர்பார்த்திருக்காது. ஆனால் இதுபோல இந்தியா தொடர்ந்து ஈடுபடுமா என்பது எதிர்பார்ப்புக்குரியது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications