'என் கணவர் என்னை விபச்சாரியாக மாற்றினார்..' ஹைடெக் பெண்ணின் கண்ணீர் வீடியோ!
சென்னை: "எனது கணவர் என்னை விபச்சாரியாக மாற்றினார்.. ஆனால் அவர் என்னை கட்டாயப்படுத்தி விபச்சாரியாக்கவில்லை.. நானாக முன்வந்து விபச்சாரம் செய்கிறேன்.." இதுதான் இணையத்தை சுற்றிவரும் யூடியூப் வீடியோ ஒன்றில் ஹைடெக்காக இருக்கும் பெண் பேசும் ஆரம்ப வார்த்தைகள்.
ஒரு பெண் விபச்சாரியாக மாறுவதற்கான காரணத்தை சூழ்நிலையின் வலியோடு எடுத்துச் சொல்லும் விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் சுற்றி வருகிறது. அதில் ஒரு பெண் மேற்கண்ட வார்த்தைகளை கூறிவிட்டு மேலும் இப்படி கூறுகிறார் "முதலில் எனது புகுந்த வீட்டாருக்கு நான் இந்த தொழில் செய்வது பிடிக்கவில்லை, ஆனால் இப்போது எனது வாழ்க்கை முறைக்கு அவர்கள் பழக்கப்பட்டுவிட்டனர்.
விபச்சாரத்தால், எனக்கு தினம் ஒரு பெயர் சூட்டப்படுகிறது, தினம் ஒரு மனநிலையிலுள்ள மனிதன் அறிமுகமாகிறான், பெரிய தொழிலதிபர், முதல் முறை வருவோர், மனைவியிடம் திருப்தி கிடைக்காத கணவர்கள்.. என எனக்கு தினம் ஒரு புது அனுபவம் கிடைக்கிறது. எனக்கு விபச்சாரத்தை தவிர வேறு வழியில்லை.
விபச்சாரத்தால் நான் தினம் தினம் சாகலாம், ஆனால் எனது கணவர் ஒருநாள் வாழ்வார் என்ற நம்பிக்கை உள்ளது, என்று அந்த பெண் சொல்லி முடிக்கும்போது கண்ணீருடன், மது குடித்து வாகனம் ஓட்டுவோரின் மனசாட்சியும் சேர்ந்து உலுக்கப்படும். மதுவால் உருக்குலைந்த பெண்ணின் வாழ்க்கையை கண்ணீரோடு சொல்லும் ஆவணப் படம் இது.












Click it and Unblock the Notifications