ஒரு கவர்னரோட மனசு இன்னொரு கவர்னருக்குத்தான் தெரியும்.. ரோசய்யா சொல்வதைப் பாருங்க!
தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா, தற்போதைய ஆளுநர் என்ன முடிவெடுக்கலாம் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்: தமிழக அரசியல் நிலவரத்தையும் கூடவே சட்ட நுனுக்கங்களையும் கருத்தில் கொண்டே ஆளுநர் எந்த முடிவையும் எடுக்க முடியும். இல்லாவிட்டால் விமர்சனங்கள் எழும் என்று தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா கூறியுள்ளார்.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தமிழக ஆளுநராக இருந்தவர் ரோசய்யா. தற்போதைய தமிழக நிலவரம் குறித்து அவர் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ஆளுநராக அவர் இருந்தவர் என்பதால் ஒரு ஆளுநர் இப்படிப்பட்ட சூழலில் எப்படி செயல்பட முடியும் என்பதை அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஹைதராபாத்தில் அவர் கூறுகையில், தமிழக அரசியலில் தற்போது நிலவும் குழப்பமான சூழ்நிலையில் பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவ் என்ன முடிவு எடுப்பார் என்று தெரியவில்லை. ஆனால், அவர் முன்பு இரு விஷயங்கள்தான் உள்ளன.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து ஆளுநரிடம் கொடுத்துள்ளார். அதை ஆளுநரும் ஏற்றுக் கொண்டு விட்டார். எனவே பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறும் சசிகலாவை முதல்வராக பதவி ஏற்க அழைக்கலாம். இல்லாவிட்டால், முதல்வர் பன்னீர்செல்வத்திடம் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பு விடுக்கலாம். இதைதத்தான் அவர் செய்ய முடியும்.
அதேசமயம், முடிவு எடுப்பதற்கு முன்பு சட்ட நிபுணர்களிடம் அவர் ஆலோசனை பெற விரும்புவதாகவும் செய்திகள் வருகின்றன. மேலும் மத்திய அரசின் ஆலோசனையை பொறுத்தே ஆளுநரின் முடிவு இருக்கும் என்றும் தெரிகிறது. தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நிச்சயம் விமர்சனங்கள் எழும், தவிர்க்க முடியாது என்று கூறியுள்ளார் ரோசய்யா.
-
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications