ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று மட்டும் என்ன செய்து விடுவீர்கள்?... தமிழக அரசுக்கு பா.ரஞ்சித் கேள்வி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டு மட்டும் என்ன செய்து விட போகிறீர்கள் என்று தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கன்னியாகுமரில் மீனவர்கள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மட்டும் என்ன செய்ய போகிறீர்கள் என்று தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓகி புயலால் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க மத்திய- மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி மீனவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் கன்னியாகுமரியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றநர்.

What the Government going to do if they win R.K.Nagar?

அரசுகளின் மெத்தன போக்கை கண்டு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசை கண்டித்து இயக்குநர் பா.ரஞ்சித் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், இன்னும் என்ன செய்ய போகிறது இந்த அரசு?? கடலுக்குள் சென்று வீடு திரும்பாத எண்ணற்ற சகோதரர்களை எதிர்பார்த்து பெரும் வலி சுமந்து காத்திருக்கும் குடும்பத்தாரின் கண்ணீர் உங்களை ஒன்றுமே செய்யாதா!! #RKnagar தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டும் என்ன செய்துவிடுவீர்கள்?? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+