ஏற்காடு தனித் தொகுதி இடைத் தேர்தல்... பாமக என்ன செய்யப் போகிறது?

ஏற்காடு தொகுதியில், சட்டசபை உறுப்பினராக இருந்த பெருமாள் மரணமடைந்ததைத் தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ம்தேதி அங்கு இடைத் தேர்தல் நடைபெறும்.
அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலில் முதல் நபராக திமுக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. திமுக வேட்பாளர் நேர்காணலையும் அக்கட்சி முதல் ஆளாக அறிவித்துள்ளது. அத்தோடு நில்லாமல், திமுகவுக்கு ஆதரவு கேட்டு கட்சித் தலைவர் கருணாநிதி பகிரங்கமாக கடிதமும் வெளியிட்டுள்ளார்.
ஆளுங்கட்சியான அதிமுக எப்படியும் நமக்கே வெற்றி என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிகிறது. மற்ற கட்சிகளின் நிலைப்பாடு இன்னும் தெளிவாகவில்லை. திமுகவுக்கு ஆதரவு தர மாட்டோம் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறி விட்டன.
தற்போது பாமகவின் நிலைப்பாடு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு ஆதரவு தர மாட்டோம் என்று ஏற்கனவே டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். எனவே திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக என எதற்குமே அக்கட்சி ஆதரவு தராது என்று நம்பலாம்.
அக்கட்சி போட்டியிடுமா அல்லது வேறு யாருக்கு ஆதரவு என்பதும் தெரியவில்லை. தனது செல்வாக்கை உரசிப் பாக்க இந்த ஏற்காட்டை களமாக எடுத்துக் கொள்ள பாமக முயலும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. ஆனால் அதை எப்படி அது செய்யப் போகிறது என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications