மெய்யூரில் பயங்கர வெடி சப்தம்.. திருக்கோவிலூரில் ஹெலிகாப்டர் விபத்து நடந்ததா.. போலீஸார் விசாரணை

Subscribe to Oneindia Tamil

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக வீடியோ ஒன்று வாட்ஸ் ஆப்பில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள மையனூர், மெய்யூர் பகுதியில் நேற்றைய தினம் பகல் 12 மணிக்கு பயங்கர வெடி சப்தம் கேட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

Whatsapp rumour that a helicopter burst in Thirukovilur region

இதைத் தொடர்ந்து 4 மணி நேரமாக சுற்றுவட்டார பகுதியில் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி. மோகன்ராஜ் வருகை தந்து விசாரணை நடத்தினார்.

டிரோன் கேமரா மூலமாகவும் போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் திருக்கோவிலூர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக ஒரு வீடியோ உள்ளூர் வாட்ஸ் ஆப்பில் பரவியது.

அந்த வீடியோ 2021 ஆம் ஆண்டு ஊட்டியில் நடந்தது என்றும் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கில் பொய்யான தகவல்களையும் வீடியோக்களையும் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனினும் பயங்கர சப்தத்துடன் வெடித்தது என்னவென போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை பகுதியில் இருந்து அந்த சப்தம் வந்ததா என்றும் விசாரணை நடத்துகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+