விமானிகளுக்கு கடுமையான ஆல்கஹால் சோதனை தேவை- பாதுகாப்பு வல்லுநர்கள் கோரிக்கை
சென்னை: விமானப்பயணத்தின் போது, விமானிகளுக்கு செய்யப்படும் ஆல்கஹால் சோதனை இன்னும் கடினமாக்கப்பட வேண்டும் என்று விமான பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையின் விமான நிலையத்தில் கடந்த 5 வருடங்களாக மது அருந்திவிட்டு வேலைக்கு வரும் விமானிகள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதனை உயர் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.கடந்த 5 வருடங்களில் கிட்டதட்ட 17 விமானிகள் ஆல்கஹால் சோதனையில் மாட்டியுள்ளனர்.
"இது ஒரு சிறிய எடுத்துக்காட்டுதான்.அதிக அளவிலான குற்றச்சாட்டுகளில் இந்த சோதனை சரியான முறையில் நிகழ்த்தப்படாததுதான் காரணமாக கூறப்படுகின்றது.அதனால், இந்த நடைமுறை இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்" என்று விமான பாதுகாப்பு குழு நிபுணரான கேப்டன் மோகன் ரங்கநாதன் கூறியுள்ளார்.
விமான நிறுவனங்கள் தற்போது விமானிகள் மற்றும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, ஊழியர்களுக்கான சட்டங்களை கடுமையாக்கி உள்ளன.அதனுடன் கூடவே இந்த சோதனையும் கடினமாக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.