மோடியை பார்த்து 'மரண வியாபாரி' என்று சோ அழைத்தது எப்போது தெரியுமா?
தனது நண்பரான மோடியை பார்த்து சோ ஒருமுறை மரண வியாபாரி என அழைத்திருந்தார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கும்.
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் 'மரண வியாபாரி' என விமர்சனம் செய்திருந்தது எல்லோருக்கும் தெரியும். குஜராத் கலவரத்தில் சிறுபான்மையினர் கொல்லப்பட்டதை மனதில் வைத்து எதிர்க்கட்சிகள் ஒரு கட்டத்தில் இந்த பிரசாரத்தை உச்சமாக்கியிருந்தன.
அதேநேரம், மோடியின் நெருக்கமான நண்பரான சோவும், மோடியை அவ்வாறு ஒரு சந்தர்ப்பத்தில் கூறி அழைத்தார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், சோ அவ்வாறு கூறிய வீடியோவை மோடியே தனது டிவிட்டர் கணக்கில் போட்டுள்ளார்.

அது துக்ளக் பத்திரிகையின் 38வது ஆண்டு விழா சமயம். அப்போது மோடியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார் சோ. வரவேற்புரையாற்றிய சோ, மோடி ஒரு மரண வியாபாரி என கூறினார். அனைவருக்கும் ஷாக். ஆனால், அதன்பிறகு அவர் கூறிய வரிகள்தான், சோ ஒரு அரசியல் நகைச்சுவையாளர் என்பதை மீண்டும் நிரூபித்தது.
The feisty Cho Ramaswamy introduces me as the 'Merchant of Death.' Do watch this memorable interaction. https://t.co/2FsF64sVvH
— Narendra Modi (@narendramodi) December 7, 2016
"மோடி மரண வியாபாரிதான்.. ஆனால் தீவிரவாதம், ஊழல், வேண்டியோருக்கு சலுகையளிப்பது, அதிகாரிகளின் திறமையற்ற நிலை, மெத்தனம், ஏழ்மை, புறக்கணிப்பு, இருள் உள்ளிட்டவற்றுக்கு.." என சோ கூறி முடித்தபோது கை தட்டல் அடங்க வெகு நேரமானது.
இந்த வீடியோவைதான் மோடி ஷேர் செய்து தனது நண்பருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications