வாங்கிய கடனுக்காக நடிகையை அரை நிர்வாணத்தில் அலற வைத்தார்களாமே.. நிஜமா?
வாங்கிய கடனுக்காக தொடையழகி நடிகையை அரை நிர்வாணத்தில் மூன்று நாட்கள் வைத்திருந்து அலற விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: படம் தயாரிக்க வாங்கிய கடனுக்காக வட்டி கட்ட முடியாமல் போனதால் தொடையழகி நடிகையை அரை நிர்வண கோலத்தில் 3 நாட்கள் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபலமாக இருந்த காலத்தில் தன்னைப்போல பிரபலமாக இருந்த நடிகைகளை வைத்து படமெடுத்தார் தொடையழகி நடிகை ஆனால் படம் படு பிளாப் ஆனது. கடனில் தவித்தார். வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்டவில்லை.
கேட்டு கேட்டு பார்த்த அந்த பைனான்சியர் ஆளையே தூக்கினார். அப்புறம் நடந்த சித்ரவதைகள் கொடூரத்தின் உச்சம் என்கிறார்கள்.
நடிகையின் நிலை
முழு ஆடையில் போட்டோ... அரை நிர்வண கோலத்தில் போட்டோ எடுத்து வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். 3 நாட்கள் அரை நிர்வாண சித்ரவதை நீடித்தது. பதறிப்போன குடும்பத்தினர் விருகம்பாக்கத்தில் இருந்த வீட்டை விற்று கடனை அடைத்து நடிகையை மீட்டனர்.
பல கோடி கடனாளிகள்
கந்து வட்டி கேட்டு தொந்தரவு செய்தால் அவ்வளவுதான் என்று ஒரு விரலை நீட்டி பேசும் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் முதல் பல தயாரிப்பாளர்கள் இன்றைக்கு பலரும் இவரிடம் கடன் வாங்கியவர்கள்தானாம்.
வளர்ந்த நடிகர் பட்ட பாடு
இவரிடம், ஒரு தயாரிப்பாளர் பட்ட கடனுக்காக ரூ. 50 லட்சம் கடன் பத்திரத்தில் கையெழுத்து போட்டாராம் அந்த நடிகர். தான் நடித்த படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதற்காக தலையை கொடுத்து மாட்டிக்கொண்டாராம். சில மாதங்கள் வட்டி கட்டி வந்த அவர், நடித்து சம்பாதித்த பணத்தை திருப்பி கொடுத்து கடன் பத்திரத்தை மீட்டாராம்.
பாராட்டிய விஷால்
கேட்ட உடனே எந்த கேள்வியும் கேட்காமல் கடன் கொடுப்பாராம். இதனால் பல தயாரிப்பாளர்கள் உருவாகியிருப்பதாக மேடையில் பகிரங்கமாக வைத்து பாராட்டினார் விஷால். இன்றைக்கு அதே விஷால்தான் கந்து வட்டி வாங்கினால் நடப்பதே வேற என்றும் அவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் வந்தாலும் சும்மா விடமாட்டோம் என்றும் கூறி வருகின்றனர். இவர்களா கந்து வட்டி பிரச்சினைக்கு முடிவு கட்டப்போகிறார்கள் என்று கேட்கின்றனர்.
சீனு ராமசாமி, பாலா, விஜய் ஆண்டனி
எதிர்ப்பு குரல்கள் இருந்தாலும், ஆதரவாக சில குரல்கள் கேட்கின்றன. அநியாயமாக வட்டி வாங்குவதில்லை என்றும் கொடுத்த கடனை திருப்பி கேட்காமல் இருப்பார்களா என்றும் சீனுராமசாமி, விஜய் ஆண்டனி ஆகியோர் கேள்வி எழுப்புகின்றனர்.
4 நாட்களாக தலைமறைவு
இதனிடையே அசோக்குமார் தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பைனான்சியர் 4 நாட்களாக தலைமறைவாக இருக்கிறார். காவல்துறையினர் ஒத்துழைப்புடனேயே அவர் தலைமறைவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.