ஆமா பாஜகவுல காவிரி குழு போட்டாங்களே... எங்கப்பா அந்த தலைவரையே காணோம்?
காவிரி பிரச்சனையை சுமூகமாக தீர்க்க பாஜக அமைத்த குழுவின் தலைவர் இல. கணேசன் எங்கே என கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: காவிரி பிரச்சனையை சுமூகமாக தீர்க்க தமிழக பாஜக இல. கணேசன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. ஆனால் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காத நிலையில் அந்த குழுவின் தலைவரைத் தேடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியமோ, மேற்பார்வை குழுவோ வந்தே தீரும்; அமைத்தே தீருவோம் என ஜம்பம் பேசியது பாஜக. இதில் மிகப் பெரிய காமெடியாக காவிரி பிரச்சனையை 'சுமூகமாக தீர்க்க' இல. கணேசன் எம்.பி. தலைமையில் ஒரு குழுவை அமைத்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
கருப்பு முருகானந்தம், பொன். விஜயராகவன் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். இவர்களும் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண டெல்லிக்குப் போனார்கள்.
காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனையை சுமூகமாக தீர்க்க தமிழக பாஜக சார்பில் 3 பேர் கொண்ட குழு பாஜக மூத்த தலைவர் திரு. இல.கணேசன் எம்.பி. அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. pic.twitter.com/KPBC26ZACU
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) March 26, 2018
அங்கே மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பம்மியே பேசினர். மேலாண்மை வாரியம் அமையும்..ஆனால் எப்பவென தெரியாது எனவும் தடாலடியாக பேட்டி கொடுத்தார் இல. கணேசன்.
இப்போது மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழக பாஜகவின் காவிரி குழுவுக்கான தலைவர் இல.கணேசன் நேற்று முதல் எங்கே இருக்கிறார்? என்றே தெரியவில்லை.