சென்னை கல்லூரி மாணவி அஸ்வினியை, அழகேசன் கொலை செய்தது ஏன்? பரபர தகவல்கள்
Recommended Video

சென்னை: சென்னையில் கல்லூரி வாசலில் வைத்து குத்தி கொலை செய்யப்பட்ட அஸ்வினி யார் அவருக்கும் அழகேசனுக்கும் இடையே என்ன பிரச்சினை என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாசலில் வைத்து அஸ்வினி என்ற அதே கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்த மாணவியை அழகேசன் கழுத்தையறுத்து கொலை செய்தார். இவரை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து கல்லூரியில் இருந்து மாணவிகள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். பத்திரிகையாளர்களை சம்பவ இடத்தின் அருகே வர வேண்டாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கொலை பின்னணி என்ன?
பொதுமக்கள் மத்தியில் நடந்த இந்த படுகொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அஸ்வினுக்கும், கொலையாளி அழகேசனுக்கும் நடுவே என்ன பிரச்சினை, கொலையின் பின்னணி என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

காதல் தொல்லை
அஸ்வினி மதுரவாயலை சேர்ந்தவர். அதே பகுதியை சேர்ந்த அழகேசன், தண்ணீர் கேன் பிசினஸ் செய்துள்ளார். அஸ்வினி கல்லூரி செல்லும்போதெல்லாம் பின்தொடர்ந்து காதலிப்பதாக கூறி தொல்லை செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அஸ்வினி, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். போலீசார், அழகேசனை கைது செய்திருந்தனர்.

ஜாமீனில் வந்து கொலை
அழகேசன் தொல்லையால் பாதிக்கப்பட்டு, மதுரவாயலை காலி செய்த அஸ்வினி, ஜாபர்கான்பேட்டையில் தங்கியிருந்து கல்லூரிக்கு வந்து படித்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த அழகேசன், பெரிய கத்தியொன்றை எடுத்து வந்து அஸ்வினியை குத்தி கொலை செய்துள்ளான்.

கலெக்டர் பேட்டி
இதனிடையே அஸ்வினி கொலை தொடர்பாக விசாரிக்க எழும்பூர் வட்டாட்சியருக்கு உத்தரவிடப்படுள்ளதாக சென்னை மாவட்ட கலெக்டர் அன்பு செல்வன் தெரிவித்தார். வட்டாட்சியர் அறிக்கை வந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கலெக்டர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications