Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணம் கொடுக்கும் வேட்பாளர்கள், அலிபாபா கதையில் வரும் 40 திருடர்களுக்கு சமமானவர்கள்: பொன்.ராதா

பணம் கொடுக்கும் வேட்பாளர்கள், அலிபாபா கதையில் வரும் 40 திருடர்களுக்கு சமமானவர்கள் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணம் கொடுக்கும் வேட்பாளர்கள், அலிபாபா கதையில் வரும் 40 திருடர்களுக்கு சமமானவர்கள் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். எக்காரணம் கொண்டும் ஆர்கே.நகர் இடைத்தேர்தலை ஒத்திவைக்கக்கூடாது என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தோல்வி பயம் காரணமாக டிடிவி.தினகரன் அடியாட்களை இறக்கி சட்டம் ஒழுங்கு பிரசச்னையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

Who is giving money for vote is equal to Alibaba and forty thieves: Pon. Radhakrishnan

இதன்மூலம் தேர்தலை நிறுத்த டிடிவி.தினகரன் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கேலிக்கூத்தாக மாற்ற முயற்சிசெய்கின்றனர் என அவர் குற்றம் சாட்டினார். பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர், ஆறு ஆண்டுகள் போட்டியிட முடியாத அளவுக்கு சட்டம் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

எக்காரணம் கொண்டும் ஆர்.கே.நகர் தேர்தலை ஆணையம் ஒத்திவைக்கக் கூடாது என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மேலும் வீடு வீடாக கட்டாயப்படுத்தி பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது என்று கூறிய பொன்.ராதாகிருஷ்ணன் பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர்கள், அலிபாபா கதையில் வரும் 40 திருடர்களுக்குச் சமமானவர்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+