தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியா, அல்லது ஆளுநரா? கேட்கிறார் தினகரன்

தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியா, அல்லது ஆளுநரா? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    க்ரீன் சிக்னல் காட்டிய டெல்லி.. அடுத்தது கோட்டைக்குள் ஆய்வு நடத்தப் போகிறார் ஆளுநர்?- வீடியோ

    சென்னை: கன்னியாகுமரியில் போராடும் மீனவ மக்களுக்கு மாநில முதல்வர் நேரில் சென்று ஆறுதல் சொல்வதற்கு பதிலாக, மாநில ஆளுநர் சென்று மீனவர்களை சந்திக்கிறார். தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியா, அல்லது ஆளுநரா? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து டிடிவி தினகரன் நேற்று தன் டிவிட்டர் பதிவில் கடுமையாக சாடியுள்ளார். தமிழக முதல்வர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    ஒகி புயலில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து காப்பாற்றுவதில், தமிழக அரசு மெத்தனம் காட்டுவதால்தான், இரவான பின்னும், ஆயிரக்கணக்கான மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வேதனையான நிலை

    காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை என்ன என்பதிலேயே தமிழக அரசு தெளிவில்லாத ஒரு நிலையில் இருப்பது மிகுந்த வேதனையளிக்கும் ஒரு நிலை. மீனவர்களின் பிரச்சினையை தலையாய பணியாகக் கருதி, அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    ஒருங்கிணைந்த செயல்பாடு தேவை

    மத்திய அரசோடு இணக்கமாக செயல்படுவதாக பெருமைபட்டுக் கொள்ளும் தமிழக அரசு, அவர்களோடு ஒருங்கிணைந்து செயல்பட்டு, காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க தாமதமில்லாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆளுநரா முதல்வர்

    மாநில முதல்வர் நேரில் சென்று, போராடும் மீனவ மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு பதிலாக, மாநில ஆளுநர் சென்று மீனவர்களை சந்திக்கிறார். தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியா, அல்லது ஆளுநரா?

    நம்பிக்கையூட்டும் நடவடிக்கை

    மீனவ மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு எடுக்காத காரணத்தால்தான் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    உணர்வுகளோடு கலந்திருப்பேன்

    நடந்த துயரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது என்பதை உணர்ந்ததால்தான், உடனடியாக குமரிக்கு சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொன்னேன். மீனவர்களின் இந்த துயரம் தீரும்வரை அவர்களது உணர்வுகளோடு நான் எப்போதும் கலந்திருப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+