ஜெ. வார்டு மாற்றத்தை அறிக்கையாக அப்பல்லோ மருத்துவமனை உடனே வெளியிடாதது ஏன்?
ஜெயலலிதா சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதை அப்பல்லோ மருத்துவமனை தாமதமாக உறுதி செய்துள்ளது.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதை இன்று உறுதி செய்திருக்கிறார் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி. ஆனால் இதனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை மூலம் அப்பல்லோ மருத்துவமனை உடனே அறிவிக்காதது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் 2 மாத காலமாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை எடுத்து வருகிறார். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை முதலில் வெளியிட்ட அறிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. அந்த அறிக்கைகளில் உண்மைகள் மறைக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தன.

பின்னர் சில வாரங்கள் கழித்தே அப்பல்லோ மருத்துவமனை ஜெயலலிதாவின் உடல்நிலையில் என்ன பாதிப்பு என்பதை விவரித்தது. இதனைத் தொடர்ந்து லண்டன், சிங்கப்பூர் மருத்துவர்கள் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் திடீரென கடந்த வாரம் ஜெயலலிதா டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல்கள் பரவின. ஆனால் அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாக மட்டுமே கூறப்பட்டது. இந்த தகவலை வைத்து அதிமுகவினரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் அப்பல்லோ மருத்துவமனையானது அதிகாரப்பூர்வமாக இதை அறிவிக்காமலே இருந்தது. இதனால் ஜெயலலிதா உண்மையிலேயே சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டாரா? என்ற கேள்வியும் எழுந்தது. இந்த கேள்விக்கு விடை தரும் வகையில் இன்று சென்னை தரமணியில் செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவுக்கு சாதாரண வார்டில் சிகிச்சை தரப்படுகிறது என கூறியிருந்தார்.
இந்த விவரத்தை இத்தனை நாள் அதிகாரப்பூர்வமாக அறிக்கையாக அப்பல்லோ மருத்துவமனை ஏன் சொல்லாமல் இருந்தது? இன்று மட்டும் திடீரென செய்தியாளர்களை அழைத்து அப்பல்லோ பிரதாப் ரெட்டி உறுதி செய்து கூறுவது ஏன்? என்ற கேள்விகள் மீண்டும் மீண்டும் எழவே செய்கின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications