ரஜினியை பாஜக குறிவைக்கும் ரகசியம் இதுதானா?
ரஜினியை அரசியலுக்கு இழுக்க காஞ்சி ஆன்மீகப் புள்ளி மூலம் முயற்சித்து வருகிறது பாஜக என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஞ்சி சங்கர மடம், அதன் கட்டுப்பாட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் போன்றவற்றுக்கு ரஜினி நேரடியாகப் போன மாதிரி வெளியில் தெரியாது. ஆனாலும் அவர் தரப்பில் அடிக்கடி தகவல்கள் பரிமாரப்படுவதாகக் கூறுகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு காமாட்சி அம்மன் கோவிலுக்கு ரஜினி போனாராம்.. சென்னை திரும்பியதும், தன்னை ஆசி கூறி அனுப்பிய ஆன்மீகப்புள்ளிக்கு தனது கைப்பட கடிதம் எழுதினாராம். அதில் "நீங்கள் அருள்வாக்கு கொடுக்கும் அன்று நிச்சயம் அரசியலில் ஈடுபடுவேன். அதற்காக காத்திருக்கிறேன்," என்று குறிப்பிட்டிருந்தாராம்.
இந்த கடித விஷயம் பாஜக தரப்புக்குத் தெரிய வந்த பிறகுதான், ரஜினியை நெருக்க ஆரம்பித்தனர் பாஜகவினர்.
எடியூரப்பா மற்றும் ஒரு சினிமா பிரபலம் ரஜினியுடன் பேச்சு நடத்தியதன் பின்னணி இதுதானாம். பேச்சுவார்த்தை நிற்கவில்லை, இன்னும் தொடர்கிறது.
ஆனால் ரஜினி இப்போதும் அந்த பழைய மனநிலையிலேயே ரஜினி இருப்பாரா? என்ற சந்தேகமும் நிலவுகிறது. பார்க்கலாம், கல்லை எறிந்து பார்ப்போம்... விழுந்தால் பழம் கிடைக்கும். இல்லையேல் போவது ஒரு கல்தானே என்பது பாஜக கணக்கு!












Click it and Unblock the Notifications