இந்த இரண்டு லைன் போதும்.. இப்போ புரிகிறதா சென்னையில் ஏன் வெள்ளம் வருகிறது என்று?
Recommended Video

சென்னை: ஏரிகளை ஆக்கிரமித்து சென்னைவாசிகள் வீடுகள் கட்டிக்கொண்டதால் நகரில் பெருமழை காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் உண்டு.
அதற்கு ஒரு நல்ல உதாரணம், இந்த டிவிட்டில் கூறியுள்ள தகவல்தான். சென்னையிலுள்ள ஒவ்வொரு ஏரியாவின் பெயரின் பின்புலத்தை ஆய்வு செய்தாலே அது ஏரியிலும், குளத்திலும் உருவான பகுதி என்பதை அறியலாம்.

தண்ணீர் செல்லும் பாதையில் மக்கள் குடியிருப்பதால் தண்ணீர் வேறு வழியில்லாமல் அங்கே தேங்குகிறது. இந்த டிவிட்டை பாருங்கள். எந்தெந்த பகுதிகள் குளம், ஏரிகள் பெயர்களை கொண்டவை என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த பகுதிகள்தான் எப்போதுமே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறுகள் அதன்போக்கில்தான் போகின்றன. நாம்தான் ஆறுகளை மறித்து வம்பு செய்கிறோம்.
வேளச்"ஏரி" ; கூடுவாஞ்"ஏரி" ; ரெட்"ஏரி" ; அடை"ஆறு" ; பள்ளிக்கர"அணை" ; பெருங்"குளத்தூர்" ; பொத்"ஏரி" ;
— Anantha Narayanan (@Anantha62094553) November 4, 2017
இப்ப_புரியுதா #ChennaiRains @Ur_Aji pic.twitter.com/6l7fMBB58o












Click it and Unblock the Notifications