நீட் தேர்வை சிபிஎஸ்இ நடத்த அனுமதித்தது ஏன்? மத்திய அரசுக்கு சென்னை ஹைகோர்ட் கேள்வி
சென்னை: நீட் தேர்வை நடத்த பொதுவான ஒரு அமைப்பை தேர்வு நடத்த அனுமதிக்காமல் சிபிஎஸ்இ அமைப்பை வைத்து தேர்வு நடத்த மத்திய அரசு அனுமதித்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு சென்னை ஹைகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று தரவரிசை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது.

இந்நிலையில் நாமக்கல்லை சேர்ந்த மாணவி, கிருத்திகா என்பவர், மாநில பாடத் திட்டத்தில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்றார். ஆனால் நீட் தேர்வில் அவரால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை.
எனவே தற்போது நடைபெறும் கலந்தாய்வில் தன்னை இணைத்துக் கொள்ள உத்தரவிடக் கோரி ஹைகோர்டடில் வழக்கு தொடர்ந்தார். இன்று வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வு விஷயத்தில் மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், சிபிஎஸ்இ மற்றும் மாநில அரசு பாடத் திட்டங்கள் என இரு வகை பாடத் திட்டங்கள் உள்ளன. ஆனால் நீட் தேர்வை நடத்த பொதுவான ஒரு அமைப்பை தேர்வு நடத்த அனுமதிக்காமல் சிபிஎஸ்இ அமைப்பை வைத்து தேர்வு நடத்த மத்திய அரசு அனுமதித்தது ஏன்?
சிபிஎஸ்இ அமைப்பு தேர்வை நடத்தினால் அந்த அமைப்பின் பாடத் திட்டத்தில் உள்ள கேள்விகளைத்தானே கேட்கும். இப்போதும் அதுதான் நடந்துள்ளது. இதனால் மாநில பாடத் திட்டத்தில் பயின்றவர்கள் நீட் தேர்வை எழுதுவதில் சிரமத்தை அனுபவித்துள்ளதாக கூறுகிறார்கள். இவ்வாறு நீதிபதி கிருபாகரன் கூறினார். இந்த வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
-
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications