நீட் தேர்வை சிபிஎஸ்இ நடத்த அனுமதித்தது ஏன்? மத்திய அரசுக்கு சென்னை ஹைகோர்ட் கேள்வி
சென்னை: நீட் தேர்வை நடத்த பொதுவான ஒரு அமைப்பை தேர்வு நடத்த அனுமதிக்காமல் சிபிஎஸ்இ அமைப்பை வைத்து தேர்வு நடத்த மத்திய அரசு அனுமதித்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு சென்னை ஹைகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று தரவரிசை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது.

இந்நிலையில் நாமக்கல்லை சேர்ந்த மாணவி, கிருத்திகா என்பவர், மாநில பாடத் திட்டத்தில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்றார். ஆனால் நீட் தேர்வில் அவரால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை.
எனவே தற்போது நடைபெறும் கலந்தாய்வில் தன்னை இணைத்துக் கொள்ள உத்தரவிடக் கோரி ஹைகோர்டடில் வழக்கு தொடர்ந்தார். இன்று வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வு விஷயத்தில் மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், சிபிஎஸ்இ மற்றும் மாநில அரசு பாடத் திட்டங்கள் என இரு வகை பாடத் திட்டங்கள் உள்ளன. ஆனால் நீட் தேர்வை நடத்த பொதுவான ஒரு அமைப்பை தேர்வு நடத்த அனுமதிக்காமல் சிபிஎஸ்இ அமைப்பை வைத்து தேர்வு நடத்த மத்திய அரசு அனுமதித்தது ஏன்?
சிபிஎஸ்இ அமைப்பு தேர்வை நடத்தினால் அந்த அமைப்பின் பாடத் திட்டத்தில் உள்ள கேள்விகளைத்தானே கேட்கும். இப்போதும் அதுதான் நடந்துள்ளது. இதனால் மாநில பாடத் திட்டத்தில் பயின்றவர்கள் நீட் தேர்வை எழுதுவதில் சிரமத்தை அனுபவித்துள்ளதாக கூறுகிறார்கள். இவ்வாறு நீதிபதி கிருபாகரன் கூறினார். இந்த வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
-
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகள்.. பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்! தர்மேந்திர பிரதான் உருக்கம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications