அனைவரும் எதிர்க்கும்போது நான் மட்டும் மோடியை ஆதரிப்பது ஏன்?: வைகோ பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொருளாதார மாணவன் என்பதால் இந்தியாவுக்கு மோடியின் திட்டம் தேவை என்று வரவேற்றிருக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

நான் தான்

நான் தான்

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி இரவில் அறிவித்தபோது தமிழகத்திலேயே முதல் ஆளாக நான் தான் அவரின் நடவடிக்கையை வரவேற்றேன்.

வரவேற்பு

வரவேற்பு

எனக்கு பிறகே மற்ற தலைவர்கள் மோடியின் அறிவிப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டார்கள். ஆதரவு தெரிவித்து அறிக்கை விட்டவர்கள் தற்போது எதிர்க்கிறார்கள்.

சிரமம்

சிரமம்

மோடியின் அதிரடி நடவடிக்கையால் பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமத்திற்குள்ளாகியுள்ளது உண்மையே. 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை முன்கூட்டியே அச்சடித்திருந்தால் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு தகவல் கசிந்திருக்கும். அதனால் அமைச்சரவைக்கு கூட தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.இதை எதிர்த்து போராட்டம் நடத்துவது அவர்களின் உரிமை.

பொருளாதார மாணவன்

பொருளாதார மாணவன்

பிற கட்சிகளை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. பொருளாதார மாணவன் என்பதால் இந்தியாவுக்கு மோடியின் திட்டம் தேவை என்று வரவேற்றிருக்கிறேன்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

1967ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்கு நீர் அளிக்க முடியாது என்று மோடி கூறுவது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+